Tuesday, 20 January 2015

தமிழ் யாதவர் ஆன்மீக வரலாறு-4

இருளப்ப கோனாரும் சூட்டுகோல் மாயான்டி சுவாமிகளும்:

சூட்டுகோல் மாயான்டி சுவாமிகள் மதுரை மாவட்டம் கட்டிகுளத்தை சேர்ந்தவர். இளமையிலேயே ஆன்மிக ஞானம் பெற்றவர். திருமனமாகி குழந்தைகள் பெற்ற பின்னர் ஆன்மிகத்தில் முழுதாக இறங்கினார். சூட்டுகோல் ராமலிங்க சுவாமிகளின் சீடர் ஆனார்.

இருளப்ப கோனார் மதுரையை சேர்ந்தவர். இவர் மதுரையை சேர்ந்த செல்வந்தரான கருப்பண கோனாரின் ஒரே வாரிசு. இவருக்கு 26 வயதுடன் ஆயுள் முடிந்து விடும் என ஆருடம் கூறபட்டதால் மிகுந்த பயத்துடன் வழ்க்கையை கழித்து கொன்டிருந்தார். அப்போது மாயான்டி சுவாமிகளின் அறிமுகம் கிடைத்து அவரின் வழிகாட்டுதலில் கருப்பனேந்தலில் ஒரு குடிலமைத்து சுவாமிகள் இருளப்ப கோனாருக்கு வரவிருந்த பினிகளை தன் உடம்பில் வாங்கி 48 நாட்கள் தாங்கி கொன்டார்.இதனை நேரில் கன்ட இருளப்ப கோனார் அன்று முதல் சுவாமிகளின் பக்தர் ஆகி சொத்துக்கள் அனைத்தையும் சுவாமிகளுக்காக செலவு செய்தார். பின்னர் சுவாமிகள் ஜீவ சமாதி அடைந்த பின்னர் அவருக்கு திருப்பரங்குன்றம் அருகே கோயில் கட்டினார். இன்று அவரின் வாரிசுகள் அதை பாதுகாத்து வருகின்றனர். திரு. ராமலிங்க கோன் இப்போது டிரஸ்டியாக செயல்படுகிரார்.

No comments:

Post a Comment