Tuesday, 20 January 2015

தமிழ் யாதவர் ஆன்மீக வரலாறு-2

எப்படி சுடலை மாட சாமி வழிபாடு நம் சமூகத்தால் கடைபிடிக்க பட்டது- வரலாறு:

சீவலப்பேரி கிராமத்தில் தான் சுடலை மாட சாமி கைலாசத்திலுருந்து மன்னுலகம் வந்த போது அவதரித்த இடம். மாசானம் என்னும் இடையர் அங்கு வாழ்ந்து வந்தார். அவரிடம் சுடலை மாட சாமி ஒரு நாள் தனக்கு பால் வழங்குமாறு மாறு வேடத்தில் வந்து கேட்டார்..ஆனால் அந்த சமயம் மாசானத்தின் ஆடுகளிடம் பால் முழுவதும் வற்றியிருந்தன. இதை சாமியிடம் தெரிவித்தார் மாசானம். ஆனால் சாமி விடாமல் கேட்டதால் பாலை கறக்க ஆரம்பித்தார். பாலும் வந்தது..இதன் பின் சாமி தன் சுயரூபத்தை காட்டி மாசனத்தின் நாக்கில் ஒரு சக்கரத்தை வரைந்து விட்டு, உனக்கு என்த பிரச்சனை வந்தாலும் நான் துனை நிற்பேன் என கூறி மறைந்தார். இதன் பின் மாசானம் யோகாசானத்தினை கற்று சிவனை வனங்க ஆரம்பித்தார். அவரை மக்கள் வள குரு சன்னாசி என வனங்க ஆரம்பித்தனர்..இன்றளவும் சுடலை மாட சாமிக்கு படைக்க படும் படையல் வள குரு சன்னாசி சாமிக்கும் படைக்க படுகிறது.

No comments:

Post a Comment