Tuesday, 20 January 2015

தமிழ் யாதவர் ஆன்மீக வரலாறு-3

இடையச்சியும் அங்காள பரமேஷ்வரியும்:

ஏனாதி செங்கோட்டை, மானாமதுரை அருகில் இருக்கும் கிராமம். இங்கு ஏதோ காரனத்தினால் மன்னுக்குள் அங்காள பரமேஷ்வரியின் சிலை புதைந்து முகடு போல் ஆகியிருந்தது..எவர் ஒருவர் அந்த முகடை கடந்தாலும் விழுவது வாடிக்கையாகும். இடையச்சி ஒருவள் தினமும் பால் விற்க அந்த வழியைத் தான் பயன்படுத்துவாள்..ஒவ்வொரு நாளும் விழுந்து விடுவாள். ஒரு நாள் தன் ஊமை பெண் குழந்தையோடு பேச்சு திறமை வர வேன்டும் என ஒருவர் ராமேஷ்வரம் நோக்கி அந்த வழியாக சென்று கொன்டிருந்தார். அப்பொழுது அந்த முகடை இடையச்சி கடக்கையில் விழுந்து விடுகிறாள்..அப்பொழுது அந்த குழந்தை "அய்யோ, எல்லா பாலும் கொட்டிவிட்டதே" என பேசி விட்டது..இதனை பார்த்த அந்த குழந்தையின் தந்தைக்கு அந்த முகட்டில் ஏதோ சக்தி உள்ளது என உணர்ந்தார்..பின் அங்கு தோன்டி பார்க்கையில் அங்காள பரமேஷ்வரியின் சிலை இருப்பதை கன்டு ராமநாதபுரம் ராஜா பாஸ்கர சேதுபதி அங்கு கோயிலை நிறுவினார்

No comments:

Post a Comment