’1936 ஆம் வருடம், நவம்பர் மாதம் ஒருநாள் பகல் பன்னிரண்டுமணி.
”உங்களுக்கு வயதென்ன?”
”இருபத்தாறு”
”ஜெயிலுக்குப் போவீர்களா?”
”போவேன்”
”கல்யாணம் ஆகிவிட்டதா?”
”இல்லை”
”ஆனால்?”
”ஆனாலும் போவேன்”
இக்கேள்விகள் திருச்சி சிறையில் 1941 ஆம் வருஷம் நம்பர் 1 கைதியாக இருக்கும் ஸ்ரீ.ராஜகோபாலாச்சாரியாரால்( ராஜாஜியால்) கரையாளரிடம் கேட்கப்பட்டன. இது எல். சட்டநாத கரையாளர் எழுதிய ’1941 திருச்சி சிறை‘ என்ற சுவாரசியமான சிறு நூல்இலுருந்து எடுக்கப்பட்டது. தியாகி சட்டநாதக் கரையாளர் யாதவகுலத்தைச் சேர்ந்தவர். யாதவர்களில் உள்ள ஒரு குடிப்பெயர்தான் கரையாளர் என்பது. 1909 அக்டோபர் 25 அன்று தென்காசியில் பிறந்தவர். செல்வந்தக்குடும்பத்தைச் சேர்ந்தவர். பி.ஏ,பி.ஏல் படித்தபின் வழக்கறிஞராக தொழில் செய்யாமல் காந்தியால் கவரப்பட்டு சுதந்திரப்போராட்டத்திற்குச் சென்றார்.
சுதந்திரத்துக்குப்பின்னர் தமிழ்நாடு மொழிவழிமாநிலமாக ஆனபோது செங்கோட்டை பகுதி கொல்லம் அரசின் கீழிருந்து தமிழ்நாட்டுடன் இணைவதற்கான போராட்டங்களில் ஈடுபட்டார். 1968ல் இவர் பெயரில் ஓர் கலைக்கல்லூரி [ தியாகி சட்டநாதக்கரையாளர் யாதவர் கல்லூரி கொடிக்குறிச்சி, தென்காசி] நிறுவப்பட்டது.
சங்கரன்கோயில் தொகுதியின் சட்டச்சபை உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டிருந்தார். 29-5-1967ல் மரணமடைந்தார்.
கரையாளரின் நூற்றாண்டு நாளில் காங்கிரஸ் சார்பில் எதுவுமே செய்யப்பட்டதாக தெரியவில்லை. காங்கிரஸில் இருந்து அதிகாரபூர்வமாக ஒரு செய்தியும் வெளியிடப்படவில்லை. தினமணி நாளிதழில் மட்டும் ஒரு கால்பக்க விளம்பரத்தைப் பார்த்தேன்.
”உங்களுக்கு வயதென்ன?”
”இருபத்தாறு”
”ஜெயிலுக்குப் போவீர்களா?”
”போவேன்”
”கல்யாணம் ஆகிவிட்டதா?”
”இல்லை”
”ஆனால்?”
”ஆனாலும் போவேன்”
இக்கேள்விகள் திருச்சி சிறையில் 1941 ஆம் வருஷம் நம்பர் 1 கைதியாக இருக்கும் ஸ்ரீ.ராஜகோபாலாச்சாரியாரால்( ராஜாஜியால்) கரையாளரிடம் கேட்கப்பட்டன. இது எல். சட்டநாத கரையாளர் எழுதிய ’1941 திருச்சி சிறை‘ என்ற சுவாரசியமான சிறு நூல்இலுருந்து எடுக்கப்பட்டது. தியாகி சட்டநாதக் கரையாளர் யாதவகுலத்தைச் சேர்ந்தவர். யாதவர்களில் உள்ள ஒரு குடிப்பெயர்தான் கரையாளர் என்பது. 1909 அக்டோபர் 25 அன்று தென்காசியில் பிறந்தவர். செல்வந்தக்குடும்பத்தைச் சேர்ந்தவர். பி.ஏ,பி.ஏல் படித்தபின் வழக்கறிஞராக தொழில் செய்யாமல் காந்தியால் கவரப்பட்டு சுதந்திரப்போராட்டத்திற்குச் சென்றார்.
சுதந்திரத்துக்குப்பின்னர் தமிழ்நாடு மொழிவழிமாநிலமாக ஆனபோது செங்கோட்டை பகுதி கொல்லம் அரசின் கீழிருந்து தமிழ்நாட்டுடன் இணைவதற்கான போராட்டங்களில் ஈடுபட்டார். 1968ல் இவர் பெயரில் ஓர் கலைக்கல்லூரி [ தியாகி சட்டநாதக்கரையாளர் யாதவர் கல்லூரி கொடிக்குறிச்சி, தென்காசி] நிறுவப்பட்டது.
சங்கரன்கோயில் தொகுதியின் சட்டச்சபை உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டிருந்தார். 29-5-1967ல் மரணமடைந்தார்.
கரையாளரின் நூற்றாண்டு நாளில் காங்கிரஸ் சார்பில் எதுவுமே செய்யப்பட்டதாக தெரியவில்லை. காங்கிரஸில் இருந்து அதிகாரபூர்வமாக ஒரு செய்தியும் வெளியிடப்படவில்லை. தினமணி நாளிதழில் மட்டும் ஒரு கால்பக்க விளம்பரத்தைப் பார்த்தேன்.